காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் திங்களன்று தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி மோகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்(உத்திரமேரூர்), சி.வி.எம்.பி.எழிலரசன்(காஞ்சிபுரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு) ஆகியோர் உடன் உள்ளனர்.