திருவள்ளூர், செப் 1- பூண்டி மற்றும் மெய்யூரில் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பூண்டி ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பூண்டி ஒன்றிய மாநாடு சனிக்கிழமையன்று (ஆக 31) சீத்தஞ்சேரியில் நடைபெற்றது. இதற்கு ஜி.மாரியம்மாள் தலைமை தாங்கினார். டி.ஜோதி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா துவக்கவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகி கள் பி.நடேசன், எஸ்.தேவா, ஆகியோர் வாழ்த்தி பேசினர். அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். சங்கத்தின் புதிய தலைவராக ஜி.மாரியம்மாள், செய லாளராக எம்.முருகன், பொருளாளராக பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும், மெய்யூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் 5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், குடிமனை இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.