கொல்கத்தாவில் வியாழனன்று (ஆக.8 ) காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு தீக்கதிர் சென்னை பதிப்பு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார் தலைமையில் பொதுமேலாளர் எம்.உஷா, சி.ஸ்ரீராமுலு உள்ளிட்ட தீக்கதிர் ஊழியர்கள் புத்ததேவ் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.