districts

img

மின்சார வாரியத்திலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்திலுள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பத்தூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வட்டத் தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏங்கல்ஸ், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசீலன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் ரங்கன், வட்டச் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி கடலூர் கேப்பர் மலையிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட சிறப்புத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், பொருளாளர் டி.ஜீவா, துணைத்தலைவர் ெஜ.முருகையன், கோட்டச் செயலாளர்கள் ஆர்.ஆறுமுகம், டி.ராஜகோபால், டி.தனசேகரன், ஆர்.வடிவேலன், கோட்டத் தலைவர்கள் எஸ்.பன்னீர்செல்வம், எஸ்.தமிழ்வாணன், எம்.ராஜேந்திரன், ஏ.கண்ணன், ஆர்.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;