districts

img

விலைவாசி உயர்வுக்கு காரணமான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றக் கோரி போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வுக்கு காரணமான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றக் கோரி தமிழ்நாடு சாலை போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ஜி.கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், தலைவர் டி.முரளி, துணைத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.பிரபாகரன், நிர்வாகிகள் வி.நாகேந்திரன், எம்.காசி, சதீஷ் முகுந்தன் ஆகியோர் பேசினர்.