முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர்களை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் கைது செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 10) தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் மாவை மகேந்திரன் (மதிமுக), தேவ.அருள்பிரகாசம் (விசிக), தா.கிருஷ்ணா (சிபிஎம்) உள்ளிட்டோர் பேசினர்.