பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை சேர்த்து வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் சு.வேல்மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மூத்தத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் குண்டு ரெட்டியார், மாநில செயலாளர் எஸ்.ஜோதிராமன், கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், வி.கதிரேசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன்,செயலாளர் ஆர்.டி.முருகன், பொருளாளர் பி.சிவராமன் உள்ளிட்ட பலர் பேசினர்.