தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசாணை 52ஐ அமல்படுத்த கோரி ஒன்றிய தலைவர் கோபுரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெள்ளி கண்ணன், ஒன்றிய செயலாளர் சதீஷ், துணை செயலாளர்கள் இயர்ஸ், மோகன், மாவட்டக் குழு உறுப்பினர் லோகநாயகி ஆகியோர் பேசினர்.