districts

img

திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை, ஜன. 21-  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் அருந்ததிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், விசிக மாவட்டச் செயலாளர்கள் பு.செல்வம், அம்பேத்வளவன், பகலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஆதித்தமிழர் கட்சி சார்பில் திருவண்ணா மலை பேருந்து நிலையம் அறிவொளி பூங்கா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செய லாளர் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில து.பொதுச் செய லாளர் ப.செல்வன், எஸ். ராமதாஸ்,  தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் ச.கருப்பையா,  ஆதித்தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் சுப. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சமூக நீதிப் போராளி கு.ஜக்கையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.