செங்கை எம்ஜிஆர் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்ட செயலாளர் கே.பகத்சிங்தாஸ், மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.மாசிலாமணி, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இ.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் யோபராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் பேசினார்.