சென்னை மாநகராட்சியுடன் சோழிங்கநல்லூர் தொகுதி இணைக்கப்பட்டு 12 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாததை கண்டித்து ஞாயிறன்று (மார்ச் 12) துரைப்பாக்கத்தில் பொது நலச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் பொது நல சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் வி.பார்த்திபன் உள்ளிட்டோர் பேசினர்.