ஆபாச விளம்பர பலகையை வைத்த சென்னை சின்னமலை செந்தூர் தங்கும் விடுதி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாயன்று (டிச.27) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி, செயலாளர் ம.சித்ரகலா, நிர்வாகி கவிதா ஆகியோர் புகார் அளித்தனர்.