districts

img

சிறுபான்மையினருக்கு நிபந்தனையற்ற வங்கிக்கடன் வழங்க கோரிக்கை

வேலூர், அக் 29 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட 3வது மாநாடு என்.பிச்சுமணி தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் அருள்சீனி வாசன்  வரவேற்றார். மாவட்ட செய லாளர் ஏ.கதிர் அகமது நடைபெற்ற வேலைகள் மற்றும் எதிர்கால பணிகளை முன்வைத்தார். மாநில துணைத்தலைவர்  மூசா, ஐசக் கதிர்வேலு, ஆம்பூர் நகரமன்ற தலைவர்ஏஜாஸ் அகமது, மாநில துணை தலைவர் அப்சல் அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டி.ஜாபர் சாதிக், வரவேற்புக்குழு மதிப்புறு தலைவர் டி.ஆர்.சலாம், சமூக செயற்பாட்டாளர் இன்பகுமார், ஆர்.மணிமாறன், ராஜகம்பீரம், இளங்கோ, பேராசிரியர் அமுதா, வழக்கறிஞர் சுந்தர், முனைவர்.ரூபஸ், மறைதிரு கே.விக்டர்,எம்.இம்மானுவேல் சபாபதி, ஜான் கிருபாகரன், மற்றும் டி.இம்மானுவேல் ராஜசேகர், அம்பேத்காரிய செயல்பாட்டாளர் விஜய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவராக  ஏ.கதிர் அகமது,  செயலாளராக வ.அருள் சீனிவாசன், பொரு ளாளராக டேனியல்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் பல்லாண்டு காலமாக விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் உரிய பங்கீடு அளிக்க வேண்டும், சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும், தலித் கிறிஸ்த வர்களுக்கு எஸ்சிக்கான உரிமைகள் வழங்க வேண்டும், சிறுபான்மை மக்கள் வங்கிக் கடன் பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை நீக்கி  கடன் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.