districts

கடற்கரையில் பள்ளி தலைமை ஆசிரியர் சடலம்

மாமல்லபுரம்,ஜூலை 7-  

    கூவத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.  

   இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியம் பகுதியில் உள்ள கடற்கரையில் பழனியப்பன் பிணமாக கிடந்தார். அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இது கொலையா , தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.