districts

img

சென்னையில் தட்சிண ரயில்வே பென்சனர் யூனியன் கிளை உதயம்

சென்னை, அக். 16- தட்சிண ரயில்வே பென்சனர் யூனியன் சென்னை டிவிசன் அமைப்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கிளையின் உதவி தலைவர் என்.அபிமன்யூ தலைமையில் பொருளாளர் கே.பாபு வரவேற்றார்.  பொதுச் செயலாளர் முருகேசன் அறிமுக உரையாற்றினார்.   தேசிய பென்சனர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு, இணைப் பொது செய லாளர் கே.ராகவேந்திரன் துவக்க உரை யாற்றினார். டிஆர்இயூ பொதுச்செயலாளர் வி. அரிலால், செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், இணை பொதுச்செயலாளர் ஏ.வெங்கடராமன், துணைத் தலைவர் பேபி சகிலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பென்சனர் சங்கத்தின் தலைவர் ஆர்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.
தீர்மானங்கள்
ரயில்வே பென்சனை ஒன்றிய அரசே வழங்க வேண்டும், 8ஆவது சம்பளக் கமிசனை உடனே நியமிக்க வேண்டும்,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதியோர்ருக்கான பயண சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ஏ.அசரத்தைய்யா, செய லாளராக பி.ஜெகதீசன், பொருளாளராக எம்.ஏ.விஸ்வநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.