கடலூர், ஏப்.2- கடலூர் இலக்கியச் சோலையில் வளவ. துரையன் எழுதிய “மலையேற்றம்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆ.மீனாட்சி வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆயிஷா நடராஜன் நூலை வெளியிட கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் வளவ. துரையன் ஏற்புரையாற்றினார். கவிஞர் பால்கி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தமுஎகச மாவட்டத் தலைவர் முனைவர் ஜானகிராஜா, கல்வித்துறைக் கண்காணிப்பாளர் சேதுராமன், தமிழ்ச் சங்கம் குறிஞ்சி ரவி, நற்றிணை இலக்கியக்கூடல் இதயத்துல்லா, மாநகரத் தமிழ்ச்சங்கம் தங்கம்.சுதர்சனம், கவிஞர் அன்பன் சிவா, பகுத்தறிவாளர் கழகத்தலைவர் எழிலேந்தி, எழுத்தாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.