திருவள்ளூர், ஆக 28- மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று (ஆக-28), மீஞ்சூர் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் மீஞ்சூர் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து பல போராட்டங்களுக்கு பிறகு ரயில்வே துறையும், மாநில அரசும் இணைந்து 2014 ஆம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்பீட்டில் 740 மீட்டர் நீளமும்,15 மீட்டர் அகலமும் மேம்பாலம் அமைக்க திட்ட மிட்டனர். பின்னர் 2018 ல் பணிகள் துவங்கின.லெவல் கிராசிங் இரண்டு பக்கங்க ளிலும் கான்கிரீட் தூண்கள் அமைத்து மேலே பாலம் மட்டும் அமைத்துள்ளனர். இரண்டு பக்கங்களிலும் இணைப்பு சாலையை அமைக்காமல் கடந்த 6 ஆண்டு களாக காலம் தாழ்த்தி வருகின்றனர். மீஞ்சூர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பழவேற்காடு, காட்டூர் சாலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினம்தோறும் பாதிக்கின்றனர்.
இந்த நிலையில் மேம்பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர் பி.கதிர்வேலு தலைமையில் திங்க ளன்று (ஆக-28), மீஞ்சூர் பஜாரில் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே கேட் முதல் அரியன்வாயல் வரை ரூ.28 கோடியும், எதிர்ப்புறம் கோயில் நிலங்களில் உள்ள தால் அதற்காகவும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி மேம்பால பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரி வித்துள்ளனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செயலாளர் இ.ஜெய வேலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், நரேஷ், செந்தில்குமார், வெங்கடேசன், நித்தியானந்தம், கவிதா, சிஐடியு மாநில துணைத் பொதுச் செய லாளர் வி.குமார், மாவட்ட துணைத் தலை வர் ஜி.வினாயகமூர்த்தி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைதாகிறார்.