கிருஷ்ணகிரி,அக்.2- தேன்கனிக்கோட்டை வட்டம் கல்லுக்கான் கொட்டாய் கிராமத்தில் 19 வயது ரோஜா என்ற பெண் வர தட்சணை கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு விஷம் கொடுத்து கொல்லப் பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகில் உள்ள கொப்பக்கரை ஊராட்சி கல்லுக்கான் கொட்டாய் கிராமத்தில் சுலோச்சனா என்பவர் வாழ்ந்து வருகிறார். 10 ஆண்டு களுக்கு முன்பு கணவன் கௌதமன் தன்னையும், 2 பிள்ளைகளையும் விட்டுவிட்டு எங்கோ ஓடிப் போய் விட்ட நிலையில் சுலோச்சனா கூலி வேலை செய்து மகள் ரோஜா,மகன் ஜெயப் பிரகாஷ் ஆகியேரை வளர்த்து வந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு சுலோச்சனா மகள் ரோஜா இதே கிராமத்தில் வசிக்கும் உறவினர் மகன் பெருமாளை காதலித்து தன் அம்மாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு ரோஜா வும் அவர் கணவர் பெருமாளும் சுலோச்சனா வீட்டிற்கு வந்து கடன் தொல்லை இருப்பதாக கூறி 5 பவுன் நகையை வாங்கிச் சென்றுள்ளனர். கணவர், மாமனார், மாமியார் ஆகி யோர் வரதட்சணை பணம் வாங்கி வரச்சொல்லி ரோஜாவை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ள னர்.
ரோஜா கேட்பதால் தாய் சுலோச்சனா அடிக்கடி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது, டெம்போ வாங்க வேண்டும், வரதட்சணையாக உன் அம்மாவிடம் ரூ.10 லட்சம் வாங்கி வா என 2 மாதங்களுக்கு முன்பு பெருமாள், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் ரோஜாவை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் கண்ணம் முதுகெல்லாம் வீங்கியபடி வந்த ரோஜாவை பார்த்த தாய் சுலோச்சனா ரூ.5 லட்சம் சீட்டு பணத்தையும் தன்னிடம் உள்ள எடுத்த நகைகளையும் விற்று ஊரில் உள்ள சில பெரியவர்களை வைத்து 5 லட்சம் ரூபாயை ரோஜா வின் கணவனான பெருமாள் குடும்பத்தின ரிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து பெரு மாள் குடும்பத்தினர் டெம்போ வாங்கினர். இனி ரோஜாவை அடித்துக் கொடுமை படுத்தக் கூடாது என்று ஊர் கூட்டத்தில் பேசி உறுதி வாங்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் அடித்து துன்புறுத்தி, ரூ.10 லட்சம் கேட்டால் ரூ 5 லட்சம் தானே உங்க அம்மா தந்தாள்,போய் மீதி 5 லட்சம் வாங்கி வா'' என அனுப்பிவிட்டனர். கண்ணம் உடம்பெல்லாம் வீங்கி சேலை கிழிந்த நிலையில் வந்த மகளை பார்த்து அதிர்ந்துபோன அவரது தயார் ஊர் பெரியவர்களிடம் கூறி தனது மகளைத் தன் வீட்டிலேயே வைத்திருந்து முடிந்தவரை பணம் புரட்டி கொடுப்பதாக கூறி அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் 26 ஆம் தேதி மாலை திடீரென ரோஜா வுக்கு உடம்பு சரியில்லை உடனே வாருங்கள் என தாய் சுலோச்சனாவை அழைத்துள்ளனர். சென்று பார்த்த போது ரோஜா உடம்பில் காயங்களுடன் வாயில் நுரை தள்ளியபடி உணர்வில்லாமல் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.
அவசரமாக ராயக்கோட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தனி யார் மருத்துவமனைக்கும் அங்கும் அனுமதிக்காத நிலையில் 27 ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் ரோஜாவின் தாய் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் வரதட்சணை கேட்டு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய குழு நிர்வாகிகளிடம் கூறினார். இதையடுத்து ஒன்றிய குழு உறுப்பினர் தூர்வாசன் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் இள வரசன் வாலிபர் சங்க வட்ட நிர்வாகி முரளி,கொலை செய்யப்பட்ட ரோஜா வின் தாய் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். காவல்துறையினர் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்காக 302 சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 28 ஆம் தேதி ரோஜாவின் உடல் பெறப்பட்டு எரியூட்டப்பட்டது. ரோஜாவின் கணவர் பெருமாள், மாமனார், மாமியார் ஆகி யோர் மீது 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்து மூவரையும் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய குழு சார்பில் காவல் துறையினரிடம் வலி யுறுத்தப்பட்டுள்ளது.