இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறுபான்மை நலக் குழு நிர்வாகி சர்தார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், தாலுகா செயலாளர் பி.சுந்தர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.கே.வெங்கடேசன், சிறுபான்மை நலக் குழு நிர்வாகி மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.