கடலூர், ஆக. 5- கடலூர் மாவட்டம் வடலூர் சந்தை தோப்பு எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து மாணவர் கிஷோர் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடலூர் பேருந்து நிலையம் அருகில் நகர அமைப்பு செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமையில் திங்களன்று (ஆக.5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் கே.சீனிவாசன், நமச்சிவாயம், கோமேதகல், ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ் சிவகாமி, சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், அழகுமுத்து, ராஜேஷ், அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.