districts

img

சுற்றுச்சுவர் அமைப்பதை கைவிட வலியுறுத்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் சிபிஎம் மனு

விருகம்பாக்கம் தொகுதி, ஜாபர்கான் பேட்டை திருநகர் வட்டவடிவ குடியிருப்பு பகுதியில் மக்கள் பயன்படுத்தி வரும் தெருவின் நடுவே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சுற்றுச்சுவர் அமைக்கிறது. இதை கைவிட வலியுறுத்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி தலைமையில் வட்ட வடிவ குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிகழ்வின்போது கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.