districts

img

கோட்லாம்பாக்கம் ஊராட்சியை தொரப்பாடி பேரூராட்சியுடன் இணைக்க சிபிஎம் எதிர்ப்பு

கடலூர், ஜன.7- கோட்லாம்பாக்கம் ஊராட்சியை தொரப்பாடி பேரூராட்சியுடன் இணைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் வாழ்வாதார மான 100 நாள் வேலை திட்டம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பறிபோகும் என்றும்,வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்றும்,  ஆகவே மக்களின் கருத்தை கேட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மக்கள்திரள் போராட்டம் புதுப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரில்  நடை பெற்றது. சிபிஎம் கிளை செய லாளர் வி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினர் கௌரி, கிளைச் செயலாளர் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்த னர். போராட்டத்தில் சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச் சந்திரன், வட்ட செயலாளர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், வட்டக் குழுஉறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், எ.பன்னீர், கே.முருகன், எஸ்.தமிழ்ச்செல்வன், ஜி.பி.தேவ நாதன்,காசி.லோகநாதன், மணிவண்ணன் மற்றும் கிராம மக்களும் பங்கேற்ற னர்.