districts

img

சிபிடி சாலையோர கடைகளை அகற்ற சிபிஎம் எதிர்ப்பு

சென்னை, ஆக. 14 - தரமணி சிபிடி சாலையோர கடைகளை அகற்றக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இரா.குமரகுருபரனிடம், கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மனு அளித்தார். அதில், 178 வது வட்டம் சிபிடி சாலை யோரத்தில் 30 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் தேநீர், டிபன் கடைகள் இயங்கி வருகின்றன. 15 குடும்பங்களை சார்ந்தவர்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டையையும் மாநகராட்சி வழங்கியுள்ளது. போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடை யூறின்றி கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இக்கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரி நோட்டீஸ் கொடுத்துள்ளார். 15 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். கடைகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது எம்.சரஸ்வதி எம்.சி., மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.