புதுச்சேரி,ஜூன் 20-
விபத்தில் படுகாய மடைந்த பள்ளி சிறுமியர் களை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் தனியாரின் கட்டு பாட்டில் இயங்கும் குளுனி துவக்க பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமிகள் வழக்கம்போல் செவ்வாய்கிழமை (ஜூன் 20) ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, புஸ்ஸி வீதியில் எதிர்பாராத விதமாக பேருந்தும் ஆட்டோவும் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டது. இதில் ஆட்டோ வில் பயணம் செய்த ஓட்டு நர் விக்னேஷ் (22), பள்ளி சிறுமிகள் 8 பேரும் படு காயமடைந்தனர்.
அக்கம், பக்கம் இருந்த வர்களும் போக்குவரத்து காவலர்களும் விபத்துக் குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதில் படுகாயமடைந்த மாணவிகள் நிக்கிஷா (10), அவந்தீகா (10) ஆகி யோருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங் கம், செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் மற்றும் சுயோட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக மருத்துவ அதிகாரியிடம் கேட்டறிந்தனர். மேலும் சிறுமிகளின் பெற்றோரை சந்தித்தும் ஆறுதல் கூறினர்.
முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகி யோர் தனித்தனியாக மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாண வர்களின் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டரிந்தார். மேலும் மாணவிகளின் பெற்றோர் களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த விபத்து தொடர் பாக புதுச்சேரி போக்கு வரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.