districts

கரடிக்காலில் தாண்டவமாடும் தீண்டாமை கொடுமை

கிருஷ்ணகிரி,செப்.17- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள மாடக்கல் ஊராட்சி கரடிக்கல் கிராமத்தில் நான்கு சமூகத்தை சேர்ந்த 200 குடும்பங்களில் தலித் மக்கள் மட்டும் 40 குடும்பங்கள் உள்ளன. தலித் மக்கள் மீதான தீண்டாமை கொடுமைகள், ஒடுக்கு முறைகள், நிலம் ஆக்கிரமிப்பு நட வடிக்கை கள் அதிகரித்து வருவ தால் நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. சாணம், குப்பைகள் கொட்டி வைக்கவும், கால்நடைகள் மற்றும் தீவனம் சேமித்து வைப்பதற்கு இங்குள்ள 76 செண்ட் நிலத்தை  75 ஆண்டுகளுக்கு மேலாக தலித் குடும்பங்கள் பயன்படுத்தி வந்தன. அதையும் அபகரிக்கும் நோக்கத்துடன் மளிகை கடை நடத்தி வரும் சின்னப்பா மகன் குமரேசன் தனது இரு சக்கர,4 சக்கர வாகனங்களையும் தலித் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் மக்கள் பயன்பாட்டில் உள்ள 76 சென்ட் நிலம் ஊரின் மையப் பகுதியில் உள்ளதால் அந்த மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று பிற சமூகத்தினரையும் தூண்டி விட்டு இரு தரப்பிற்கும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார் குமரேசன். இதுகுறித்து தலித் மக்கள் அளித்த புகாரை விசாரணை செய்ய அரசு அதிகாரிகள் வந்த தால் ஆத்திரமடைந்து குமரேசன் மற்றும் சிலர் தலித் மக்கள் மற்றும் காவல் துறையுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தலித் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் அங்கி ருந்து அம்பேத்கர் படத்தையும் அகற்றி அந்த நிலத்தில் வேலி அமைத்து இது அரசுக்கு சொந்த மானது என்றும் இனி யாரும் இந்த நிலத்தை பயன்படுத்த கூடாது என்றும் அரசு அதிகாரிகள் தெரி வித்து சென்றனர். இதையடுத்து, மற்ற சமூ கத்தை சேர்ந்த சிலர் தலித் மக்க ளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தால் சாராட்சியர் மற்றும் வட்டாட்சி யரிடம் மீண்டும் புகார் தெரி வித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் தரப்பினர் ஊர் கட்டுப்பாடு எனக்கூறி தலித் மக்க ளுக்கு செல்லும் பாதை, கால் நடை களை மேய்க்க செல்லும் பாதை, காலை கடன்களுக்காக குட்டைக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் அடைத்து தீண்டாமை கொடுமைகள் கடைபிடித்து வரு கின்றனர். போதாகுறைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாற்று சமூகத்தினர் அருகில் தலித் மக்கள் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது என்றும் ஊருக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடையை அப்புறப்படுத்தி 4 கிலோ மீட்ட ருக்கு அப்பால் இட மாற்றம் செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர்கள், மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் பாதிக்கப்பட்ட தலித் மக்க ளுக்கு நீதி கேட்டு போராட்டத்தை அறி வித்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 4 ஆம் தேதி அமைதி ஏற்படுத்தும் வகையில் அஞ்செட்டி வட்டாட்சியர், காவல்துறை அதிகாரி கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்த னர். மாவட்ட ஆட்சியர் தலை மையில் கோட்டாட்சியர், வட்டாட்சி யர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தியதால் அன்றைய தினம் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் 12 ஆம் தேதி அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு தலித் மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த நிலையில், தலித் மக்களின் பாதிப்பை உணர்த்தும் இரு தரப்பு மக்களிடையே விபரீத மான சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அமைதி ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.