வேலூர் மாநகராட்சி 12, 23, 58 ஆகிய வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் பா. சுந்ததராசன் ஆகியோர் வீதி வீதியாக சென்று வாக்குகள் கோரினர். மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி. ராமச்சந்திரன், எஸ்.டி. சங்கரி, கே.ஜெ சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். பரசுராமன், வி, நாகேந்திரன், எ.குப்பு, எஸ் செல்வி, கே.பாண்டுரங்கன், சுடரொளியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.