சென்னை, மார்ச் 29 - பிராமனர் அல்லாத அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்து மதுரை உயர்நீதி மன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (மார்ச் 28) மத்தியசென்னையில் துண்டுபிரசுர விநியோக பிரச்சாரம் நடைபெற்றது. அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளி யில் பிராமனர் அல்லாதோர் பயின்று பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். இதன்படி வயலூர் முருகன் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்ச கர்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக்க நிய மிக்க தடையாக உள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரு கிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து 6 மையங்க ளில் கோவில்களுக்கு வரும் பக்தர்க ளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டது. இதன்படி, தங்கசாலை பேருந்து நிலையம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்பு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க சென்னை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசனும் கலந்து கொண்டனர். எம்எம்டிஏ காலனி, ஸ்ரீ அரி மடம் பெருமாள் கோவில் அருகே சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தரராஜன், மாற்றுத்திறனா ளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணியும், சூளை மார்க்கெட் அங்காளம்மன் கோவில் அருகே வழக் கறிஞர் திலகவதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மணிகண்ட னும் பங்கேற்றனர். அயனாவரம் சோலையம்மன் கோவில் முன்பு நடைபெற்ற பிரச்சாரத் தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.திருவேட்டையும், கோடம் பாக்கம் ரயிலடி அருகே பத்திரிகையா ளர் கவிதா முரளிதரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ராஜசங்கீதனும் பங்கேற்றனர்.
கொலை வெறித் தாக்குதல்
ராயப்பேட்டை நாகாத்தம்மன் கோவில் அருகே ‘யூ டூ புரூட்டஸ்’ மைனர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.சாந்தியும் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து அங்கு வந்த அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் நரசிம்மன், துண்டறிக்கை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் உறுப்பினர் இளங்கோவை கொலைவெறியோடு தாக்கினார். இதை தடுக்க வந்த சிபிஎம் பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரனையும் ஆபாசமாக பேசி தாக்க முயன்றார். இதனையடுத்து பல்வேறு அமைப் பினர் திரண்டு வந்ததும் நரசிம்மன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக ராயப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காயமடைந்த இளங்கோ ராயப்பேட்டை மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏப்.1 பொதுக்கூட்டம்
அனைத்து இந்துக்களையும் அர்ச்ச கராக கோரி ஏப்ரல் 1 அன்று வில்லி வாக்கத்தில் பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச உள்ளனர்.