districts

சென்னை முக்கிய செய்திகள்

கிரிப்டோ கரன்சியில் ரூ.46 லட்சம்  மோசடி  காஞ்சிபுரத்தில் தம்பதி கைது

காஞ்சிபுரம், மார்ச் 8 - கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய  கூறி ரூ.46 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு  காவல் துறையினர் கைது  செய்தனர். தமிழகத்தில் ஐஎப்எஸ் , ஆருத்ரா மற்றும் கிரிப்டோ கரன்சி எனும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பல்லாயிரக்கணக்கானோர் முதலீடு செய்து,  தற்போது அது அனைத்தும் மோசடி  என தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள னர். மேலும் இந் நிறுவனங்களின் உரிமை யாளர்கள் தலைமறைவாகியும்,  கைது செய்யப்பட்டும் பணம் திரும்ப கிடைக்குமா என்ற நிலையில் முதலீடு செய்தவர்கள் உள்ளனர். அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் , அவரது உறவினரான வெம்பாக்கம் வட்டம் , சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகி யோரின் ஆசை வார்த்தைகளை நம்பி,   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே மனோகரன், கிரிஜாவை வரவழைத்து 4 மாதங்களில் பல்வேறு  தவணைகளில் ரூ.66 லட்சம் அளித்துள்ள னர். இந்நிலையில் விஸ்வநாதன் முதலீடு  செய்த பணத்தை திருப்பி கேட்டபோது,  அந்த பணம் வேறு ஒருவரிடம் முதலீடு செய்துள்ளதாகவும் அந்த பணம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தந்தால் திருப்பி தருவதாக கூறி மோசடியில்  ஈடுபட்டுள்ளதாக மனோகரன்,  மனைவி கிரிஜா மற்றும் மனோகரனின் தந்தை மதியழ கன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில்  மனோகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில்  மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து மனோகரனின் தந்தை மதியழகன்  மற்றும் மனோகரனின் மனைவி கிரிஜா ஆகியோரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதுபோதையில் தகராறு  தட்டிக் கேட்டவர் கொலை 

சென்னை, மார்ச் 8- சென்னை புளியந்தோப்பில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் வீட்டின் அருகே கடந்த 3ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (20), அஜித்குமார் (21), சிலம்பரசன் (24), விக்கி (22) ஆகிய 4 பேரும் மது போதையில் அடாவடி செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அதிகமாக சத்தமிட்டு அடாவடி செயலில் ஈடுபட்டதால், சக்திவேல் கண்டித்துள்ளார். இதில் இருதரப்புக்கும் இடையே  வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். அன்று இரவு சக்திவேல், அதே பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த அந்த 4 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக்திவேலை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல்,  சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் வியாழனன்று உயிரிழந்தார். இது தொடர்பாக பேசின் பாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,நவீன்குமார், அஜித்குமார், சிலம்பரசன், விக்கி ஆகிய 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 8 - காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 3டன் போதைப் பொருட்களை வெள்ளியன்று தீயிட்டு கொளுத்தினர். மாநில அரசு  போதைப் பொருட்கள் விற்ப னையை தடை செய்வதற்கு காவல்துறை மற்றும் உணவு  பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 2021- 2023 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை களின் மூலம் 3228 கிலோ( 3.2 டன்) கொண்ட பொருட்களை  வெள்ளியன்று  மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே தீயிட்டு எரிக்கப்பட்டது. இதற்காக காவல் நிலையங்களில் வழக்கு முடிவுற்று இருப்பு வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து எடுத்துவரப்பட்டு மதுவிலக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் அனுராதா, மதுவிலக்கு தடுப்பு பிரிவு ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் முன்னிலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

சிதம்பரத்தில் பாலியல் சமத்துவ பட்டறை

சிதம்பரம், மார்ச். 8- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தை பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறையை பல்கலைக்கழக மக்களியில் துறையில் நடைபெற்றது.   நிகழ்வில் கலைப் புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கி பேசி னார். மக்களியல் துறை உதவி பேரா சிரியர் க. மகேஸ்வரி  வரவேற்றார். துறைத் தலைவர்  ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரை யாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரி யர் அரங்க பாரி, ராஜீவ் காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேரா சிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, மக்களியல் துறை உதவி பேராசிரியர் க. மகேஸ்வரி ஆகி யோர் மாணவர்களுக்கு பாலியல் சமத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிறைவாக இணை பேராசிரியர் பீம் லதா தேவி நன்றி கூறினார்.

சிபிஎம் போராட்டம் வெற்றி: மைசூர் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு

சிதம்பரம், மார்ச் 8- மயிலாடுதுறை முதல் மைசூர் வரை இயக்கப்படும் ரயிலை சிதம்பரம் வழியாக கடலூர்துறைமுகம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வர வேற்றுள்ளது. 11 கோரிக்கைகளை வலி யுறுத்தி  சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்ச்2 அன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே போல் கடந்த 5  ஆண்டுகளுக்கு மேலாக சிதம்ப ரம் வர்த்தக சங்கம், சிபிஎம்,  ரயில் பயணிகள் சங்கம், விசிக ,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதே கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இதற்கு அமைதி பேச்சு வார்த்தை மூலம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள எம்.பி-க்கள் கலந்து கொண்ட ஆலோசனை  கூட்டத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமை யிலான சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணி கள் சங்கத்தினர் மற்றும் விசிக நிர்வாகிகள், சிதம்பர நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்  குமரன் அடங்கிய குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.  இந்த நிலையில் வியாழ னன்று (மார்ச்7) ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளனர்.  அதில் மைசூர்-மயிலாடுதுறை விரைவு ரயிலை கடலூர் துறை முகம் வரை சிதம்பரம், சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நீட்டிப்பு செய்வதாகவும்.  எந்த தேதியில் இருந்து  ரயில் இயக்கப்படும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ள தாகவும் அந்த அறிவிப்பில் தெரி வித்துள்ளனர். இந்த அறி விப்புக்கு சிபிஎம்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு பேசுகையில், இந்த அறி விப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மற்ற 10 கோரிக்கைகளையும் நிறை வேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

உளுந்தூர்பேட்டை-திருக்கோவிலூர் நகராட்சி புதிய அலுவலகங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி, மார்ச் 8 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் நகராட்சிகளின் புதிய அலுவலகத்தை மார்ச் 8 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிதாக அலுவலகம் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் நகராட்சி துறை அமைச்சர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2023-23 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. பிறகு, திருச்சி-நெடுஞ்சாலையில் தொழிற் பயிற்சி நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. அதேபோல், திருக்கோவிலூர் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, இந்த கட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஷ்ரவன் குமார்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஆ. ஜெ. மணிக்கண்ணன் மண்டல செயற்பொறியாளர் டீ.சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் மா.சிவராமன், நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் உ..சி.வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.