districts

img

ஊராட்சிமன்றத் தலைவரின் ஊழல்-முறைகேடு

கிருஷ்ணகிரி, ஜன 4- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் கொண்டப்பநாயன பள்ளி ஊராட்சியில் 9 கிராமங்கள், 3000 வாக்காளர்கள், 9 வார்டு உறுப்பி னர்கள் உள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சிமன்றத் தலைவராக மதிவாணன், துணைத் தலைவராக மாதையன் வெற்றி பெற்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் மதிவாணன், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. கிராம ஊராட்சியின் சாலைகள் இன்னும் மண் சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சியளித்து வருகிறது. குடிநீர் பிரச்சனையைக் கூட தீர்க்க முன்வரவில்லை. இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் வரும் நிலையில், உண்மைக்கு மாறாக செலவு கணக்கு எழுதி 30 லட்சம் ரூபாயும் எடுத்துக்கொள்கிறார். கழிவு நீர்க் கால்வாய்கள் அமைக்கபடாமலும் தண்ணீர் வெளியே போதிய வதிகள் கிடை யாது. கிருமி நாசனி, முகக் கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்காமலே வாங்கியதாக கணக்கு எழுதியது மட்டுமல்லாமல் ஊர்பெயர் தெரியாத கடைகளில் பில்களை வாங்கி பணம் எடுத்து கையாடல் செய்துள்ளார். இந்த ஊராட்சிக்குட்பட்ட புருஷோத்தம் நகர், அக்ரஹாரம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இதற்காக இரண்டு முறை சாலை மறியலும் நடத்தியுள்ளனர். அப்போதும் கண்டுக்கொள்ளவில்லை. இத னால், தினமும் 250 மீட்டர் தூரம் உள்ள தனியார் கிரானைட் கம்பெனிக்கு சென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாது என்பவர், ஊராட்சி மன்றத் தலைவர் மதிவாணனிடம் கேட்டபோது, “ நீ என் சிறுநீரை பிடித்து குடி”என்று மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். மேலும், தைரியம் இருந்தால் எங்கு? யாரிடம் வேண்டுமானாலும் என் மீது புகார் செய் என்றும் ஆவணமாக பேசியிருக்கிறார். ஊராட்சிமன்ற கூட்டப் பதி வேட்டில் வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, ஊராட்சி மன்ற கூட்டத்தை நடத்தாமலே கூட்டம் நடத்தியதாக எழுதிக் கொள்வதும், உண்மைக்கு மாறாக செலவுகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் அனுமதியளித்தாக வும்  கணக்கு எழுதிக்கொண்டுள்ளார். மதிவாணனின் ஊழல்கள் முறை கேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி 16.7.2021ல்  ஊராட்சி மக்கள், வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்த நிலையில், ஊராட்சிமன்றத் தலைவரால் பாதிக்கப்பட்ட மாது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதையன், வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் ஜன.3 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “ஊராட்சிமன்ற வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும், ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழல்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் ஊராட்சிமன்றத்தின் வரவு-செலவு கணக்குகளை பராமரிக்க தனி அலுவலர் நியமிக்க வேண்டும். கிராம மக்களின் அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க உரிய நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.