districts

img

மாநகராட்சி சிபிஎம் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

சென்னை, பிப். 9 - மதச்சார்பற்ற முற் போக்குகூட்டணி சார்பில் போட்டியிடும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் புத னன்று (பிப்.9) வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டனர்.

மா.சுப்பிரமணியன்
சென்னை மாநக ராட்சி 148ஆவது வட்டத்தில் போட்டியிடும் எஸ்.வெள்ளை ச்சாமிக்கு வாக்கு கேட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வட்டம் முழுவதும் பிரச்சாரம் செய் தார். மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம் பாக்கம் கணபதி, வட்டச்  செயலாளர் எம்.கே. கமலக் கண்ணன், அவைத்தலைவர் என்.டி. தயாளன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தா மஸ், வட்டச் செயலாளர் வெங்கட், காங்கிரஸ் வட்டத்  தலைவர் சரவணன், விசிக  வட்டச் செயலாளர் வேடியப் பன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். 123ஆவது வட்டத்தில் போட்டியிடும் எம்.சரஸ்வதி தேனாம்பேட்டை முதலியாண்டான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திமுக 123ஆவது ஆ வட்டச் செயலாளர் வில்லவன், மாவட்ட நிர்வாகிகள் மலர்,  கு.ராஜூ, முல்லை வேந்தன்,  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி,  கிளைச் செயலாளர் நித்தி யானந்தம் உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர் கள் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.ஜெய ராமனுக்கு வாக்கு கேட்டு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், திமுக வட்டச் செயலாளர் பவுல், இளைஞர் அணி மாவட்ட நிர்வாகி மதன்குமார், மேற்குப் பகுதி செயலாளர் ஆர்.டி.மதன்குமார், வழக்கறிஞர் ஜெய்சங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவண தமிழன்,  பகுதிச் செயலாளர் கதிர் வேல் உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட னர். ஆர்.கே.நகர் 41ஆவது வார்டில் போட்டியிடும் வேட் பாளர் பா.விமலா வீடு வீடாகச் சென்று வாக்கு சேக ரித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர், பகுதிச் செயலாளர் ஜெப தாஸ் பாண்டியன், வட்டச் செயலாளர் பரசுராமன், தேவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோக நாதன், ஆர்.விஜயகுமார், எஸ்.ராணி, பகுதிச் செயலாளர் தீபா உள்ளிட்டு கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் 98 ஆவது வட்டத்தில் போட்டி யிடும் வேட்பாளர் ஆ.பிரிய தர்ஷினிக்கு வாக்கு கேட்டு அயனாவரம் திருவள்ளூ வர் நகரில் சட்டமன்ற உறுப் ப்பினர் அ.வெற்றிஅழகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். சிபிஎம் மத்திய  சென்னை மாவட்ட செயலா ளர் ஜி.செல்வா மற்றும் கூட்டணி கட்சியினர் உடனி ருந்தனர்.

தாம்பரம் 
தாம்பரம் மாநகராட்சி 61ஆவது வட்டத்தில் போட்டியிடும் ஆர்.விஜயா தேவநேசன்நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக  நிர்வாகிகள் மஞ்சுநாத், வேலு மணி, சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா மற்றும் வேணு கோபால் (காங்.), ரமேஷ் (மதிமுக), மதன்குமார் (விசிக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 28ஆவது வட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.விஜயலட்சுமிக்கு வாக்கு கேட்டு பல்லாவரம் சட்டமன்ற  உறுப்பினர் இ.கருணாநிதி குடியிருப்போர் நலச்சங்கங் களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். நியூக்காலனியில் நடைபெற்ற பிரச்சாரத் தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
ஆவடி
ஆவடி மாநகராட்சி 10ஆவது வட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அ.ஜான் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.