districts

30 ஆண்டுகளுக்கு பிறகு நிறும வரி உயர்வு

சென்னை, ஆக. 31 - நிறும வரியை 30 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சி திருத்தி அமைத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழனன்று (ஆக.31) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெயர் மாற்றம் அதன்படி, 130ஆவது வட்டம் குமரன் காலனி பிரதான சாலைக்கு ‘மாண்டலின் சீனி வாஸ் பிரதான சாலை’ என பெயர் மாற்ற வும், மியூசிக் அகாடமி எதிரே கதீட்ரல் சாலை யில் உள்ள பாலத்திற்கு ‘டாக்டர் எம். பால முரளி கிருஷ்ணா மேம்பாலம்’ என பெயர் சூட்டப்படும். நிறும வரி உயர்வு தொழில் நிறுவனங்களுக்கான 1993ல் இருந்து அரையாண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் நிறும வரி 30 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன்படி, குறைந்த பட்சம் 100 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், அதிகபட்சமாக 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு வெளியே தலைமையிடம் அமைத்து, சென்னையில் இயங்கும் கிளை நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 25 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக வும், அதிகபட்சமாக ஆயிரம் ரூபாயிலி ருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

50 விழுக்காடு சலுகை மாநகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள 50 விழுக்காடு கட்டணத்தில் சமுதாய நலக்கூடங்கள் வழங்கப்படும். பூங்கா சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ராமபுரத்தில் 1.4ஏக்கர் பரப்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும். கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படும். எண்ணூர் காய்கறி சந்தை மற்றும் சமுதாய நலக்கூடம்

ரூ 5 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்தல், புழல் மகாலட்சுமி நகர் சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ. 4 கோடி செலவில் புதிய வளாகம், மேட்டுப் பாளையம் சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானம் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்படும். புரசைவாக்கம் சலவை கூடம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்ளவும், வியாசர்பாடி கன்னிகா புரம் விளையாட்டு திடல் ரூ4 கோடி செலவில் மேம்படுத்தப்படும். பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நேரமில்லாத நேரத்தில் பேசிய கணக்குக்குழுத் தலைவர் க.தனசேகரன் பேசு கையில்,2019-20ஆம் நிதியாண்டில், ஜிஎஸ்டி- யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிளீச்சிங் பவுடருக்கு சுமார் ரூ28 லட்சம் வரி செலுத்தி முறைகேடு செய்துள்ள னர். செயற்பொறியாளருக்கு கார் வழங்கப் படாத நிலையில், 11 மாத வாடகையாக ரூ. 5.11 லட்சம் டாடா இண்டிகா காருக்கு செலவிடப்பட்டுள்ளது. அந்த நிதி யாண்டில், அந்த காரின் விலையே ரூ.4.39 லட்சம் தான். ஸ்டேட் வங்கி கணக்கில் இருந்து, மாநகராட்சிக்கு தொடர்பில்லாத ஒரு கணக்கிற்கு ரூ18 லட்சம் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவைகுறித்தெல்லாம் ஆய்வு செய்து ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை:  சிபிஐ கோரிக்கை

தமிழகத்தில் முதன்முதலில் மேதினத்தை கொண்டாடியவர் சிந்தனைசிற்பி ம.சிங்காரவேலர். மே தினமே வருக… என மே தினத்தை வாழ்த்தி முதலில் பாடியவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மே தின பூங்காவில் அவருக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரேணுகா கோரிக்கை விடுத்தார். அதற்கு மேயர் ஆர்.பிரியா, பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்தார்.