districts

img

தொடர் மழை: அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

ஆம்பூர், மே 19- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திர வனப்பகுதி களில் பலத்த மழை பெய்து வரு வதால் கோடைகாலத்திலும் பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. கடந்த நவம்பர் மாதம் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குடியாத்தம் மாதனூர் இடையே இருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பிறகு தரைப்பாலம் இருந்த இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக பாலாற்றில் அதிக ளவு தண்ணீர் வந்தது. இதனால் மாதனூர் குடியாத்தம் இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ? இதன் காரணமாக மாதனூர் குடியாத்தம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் ஒடுகத்தூர் ஆகிய பகுதி களில் இருந்து குடியாத்தம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடுகத்தூர் பகுதிகளில் இருந்து குடியாத்தம் செல்லும் வாகனங்கள் பள்ளிகொண்டா வழியாகவும், ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு வழியாக சுமார் 25 கி.மீ. சுற்றி வாகனங்கள் குடி யாத்தம் செல்கின்றன. மாதனூர் குடியாத்தம் தரைப்பாலம் இருந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த தரைப்பாலத்தை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.