districts

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: காவேரிப்பட்டிண தோழர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, ஜன.11- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகர் பகுதியில் தீக்கதிர் சிறப்பு விற்பனை மற்றும் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பெரியசாமி தலைமையில் 200 பிரதிகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும், சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கிருஷணகிரி வட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் சக்தி, மூத்த தோழர்.அழகிரிசாமி, கிளை செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.பேருந்து களிலும், பேருந்து நிலையம் மற்றும் நகரிலும் கடைகள், பொதுமக்களிடம் காலை  முதல் மாலை 7 மணி வரை பிரச்சாரமும், விற்பனையும் செய்த னர். அப்போது, நகரக் கடைகளில் 30 மாதச் சந்தாக்களை புதிதாக சேர்த்தனர். இந்த புதிய முயற்சிக்கு  கிருஷ்ணகிரி வட்டக் குழு, மற்றும் காவேரிப்பட்டிணம் தோழர்களுக்கும் மாவட்ட செயலாளர் ஆர்.ஜி.சேகர் பாராட்டு தெரிவித்தார்.