districts

img

தோழர் சீனிவாசன் காலமானார்

திருவள்ளூர், பிப் 27- வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த தோழர் சீனிவாசன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரும், வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட நிர்வாகியுமான வாயலூர் கிராமத்தை சேர்ந்த தோழர் சீனிவாசன் (54) சனிக்கிழமையன்று (பிப். 26) காலமானார். இவர் தொழிலாளர் உரிமைகளுக்காக, பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்காக போராடி சிறை சென்றவர். அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக் குழு உறுப்பினர் வி.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், ஜி.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் இ.ஜெயவேல் (மீஞ்சூர்), எஸ்.இ.சேகர் (பொன்னேரி), ஜி.வி.எல்லையன் (சோழவரம்), மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.கலாம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி, வடசென்னை அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல்  மீஞ்சூர் அருகிலுள்ள வயலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஞாயிறன்று (பிப். 27) அடக்கம் செய்யப்பட்டது.