districts

img

விடுதலைப் போராட்ட வீரரும், ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான தோழர் என்.சங்கரைய்யா

விடுதலைப் போராட்ட வீரரும், ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான தோழர் என்.சங்கரைய்யா-விற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தது. அதற்கு  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார். இதனை கண்டித்து ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை அக்.26-27 தேதிகளில் இந்திய மாணவர் சங்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக சென்னை பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பினர். இந்த நிகழ்வில் மத்தியசென்னை மாவட்ட துணைத்தலைவர் தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.