districts

img

கள்ளக்குறிச்சியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12-ஆம் வகுப்பு பயின்று  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்  தலைமையில் திங்களன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குநர் லதா.ஆத்தூர் முதன்மைக்  கல்வி அலுவலர் முருகன், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனியன்,  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, நான் முதல்வன் நிகழ்ச்சி மேலாளர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;