திருத்தணி,ஜன.11- திருவாலங்காடு அடுத்த மணகூர் கண்டிகை கிரா மத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் அங்கு அதிரடி யாக சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் சேவல் சண்டை சூதாட்டத் தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட் டோர் ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் 2 பேரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் சொகுசு கார், ஆட்டோ மற்றும் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.