காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் தூய்மைப்பணி நடைபெற்றது. வங்கியின் சென்னை மைய அலுவலக வளாகத்தில் செயல் இயக்குநர் எஸ் ஸ்ரீமதி சிவிஓ -ஆர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தூய்மை இயக்கம் நடைபெற்றது. அனைத்து பொதுமேலாளர்கள், துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். சென்னையில், மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே மண்டல மேலாளர்கள் பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.