districts

img

சிவில் விமான போக்குவரத்து தினம்

 சென்னை, டிச. 14-   மாநில மற்றும் நாட்டின்  சமூக மற்றும் பொருளா தார வளர்ச்சியில் சர்வ தேச சிவில் விமானப் போக்கு வரத்து துறையின் முக்கியத் துவம் குறித்து மாணவர்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜனியரிங் கல்லூரியில் சர்வதேச சிவில் விமான போக்கு வரத்து தினம் கடைபிடிக் கப்பட்டது. இதில் இந்திய விமான நிலைய அதிகாரிகள் அமைப்பின் பொது மேலாளர் பாலன் மற்றும் ஐெஜட் ஏவியேஷன் இயக் குநரும் தலைமை செயல் அதிகாரியும், விமானத் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவருமான நித்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பாலன், பொறியியல் பட்டதாரிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார்.  விமானத்  துறையில் சேரத் தேவை யான திறன்கள் குறித்து மாணவர்களுக்கு நித்யா  ராமகிருஷ்ணன் விளக்கி னார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், கல்லூரி இயக்குனர் ரம்யா தீபக், முதல்வர் ரமேஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.