districts

img

சாம்சங் ஆலையில் சட்டவிரோதமாக நேரடி உற்பத்தியில் ஒப்பந்த ஊழியர்கள்

சென்னை, அக்.3- சாம்சங் தொழிற்சாலை யில் சட்டவிரோத உற்பத்தி மீது நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்று கிண்டி சிட்கோ வளா கத்தில் உள்ள  தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.இளங்கோவனிடம் சிஐடியு புகார் செய்துள்ளது. இதுகுறித்து சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க (சிஐடியு)  தலைவர்.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் அளித்த  மனு வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதி யில் செயல்படும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தொழி லாளர்கள் தொழிற்சங்கம் அமைத்த காரணத்தினால் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டது. சங்க அங்கீகாரம் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதி ராக செப்டம்பர் 9 முதல் 1810 நிரந்திர தொழி லாளர்களில் 1450 பேர் வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த காலத்தில் சாம்சங் நிர்வாகம், சரக்கு களை ஏற்றி இறக்கும் பணி யில் காண்ட்ராக்ட் தொழி லாளர்களை எடுத்து அவர்களை நேரடி உற்பத்தி யில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் அல்லாத வேறு நிறு வனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும், இந்த நிறுவனத்தின் மேலாளர், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களும் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு வரு கின்றனர். 1810 தொழிலாளர்களில் 1450 பேர்வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கும் போது உற்பத்தி வருவது என்பது முழுக்க முழுக்க சட்ட விரோத உற்பத்தி யாகும். மேலும் இங்கு பயிற்சியற்றவர்களை நேரடி உற்பத்தியில் ஈடு படுத்தி அதன் மூலம் தொழிற் சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. எனவே இந்த நிறுவனத்தின் சட்ட விரோத உற்பத்தி யின் மீது கடும் நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.