districts

img

காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், நவ.20- சிதம்பரம் வடுகநாதன் திரையரங்கில்  கடந்த 17 ஆம் தேதி இரவு  சிரஞ்சீவி (29) சகோதரர்கள் பழனிச்சாமி, ராமராஜன், அவரது தாயார், அண்ணி, தங்கை மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் முன்னிலையில் மது அருந்தி வந்தியா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் வாக்குவாதம் முற்றி திரை யரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவி மற்றும் அவரது அண்ணன் பழனிச்சாமி, ராமராஜன் ஆகி யோரை கட்டை மற்றும் அங்கிருந்த பேரிகேட் பைப்புகளால் அடித்ததில் சிரஞ்சீவியின் மண்டை உடைக்கப்பட்ட 9 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிதம்பரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் விட்டுவிட்டனர். காவல்துறையின் இந்த செயலை கண்டித்து சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நகர செய லாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிப் பேசினார். இதில் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், வாஞ்சிநாதன், சித்ரா (சிபிஎம்) தமிமுன் அன்சாரி (சிபிஐ), தில்லை ஆர்.மக்கீன், ராஜா சம்பத்குமார் (காங்கிரஸ்), ஆர்.செல்வரத்தினம் (திக), ஆர்.கே.குமரன் (தவாக), சாகுல் (மமக), ஆதிமூலம் (விசிக) மற்றும் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திரையரங்கு ஊழியர்களின் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் அதற்கு காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேசினார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய சிதம்பரம் நகர காவல்துறையினரை கண்டித்தும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வலியுறுத்தியும் வருகிற 24 ஆம்  சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.