districts

சென்னை விரைவு செய்திகள்

ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி

திருவண்ணாமலை, அக்.28- வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்து உள்ளிட்ட வாக னங்கள் கண்ண மங்கலம் ரயில்வே கேட் வழியாக செல்கின்றன. இங்கு தண்ட வாளங்கள் பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதனால் வேலூரிலிருந்து திருவண்ணாமலை, போளூர், திருக்கோவிலூர், திருச்சி செல்லும் வாகனங்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் சாலையில் அணிவகுத்து நின்றன.  கண்ணமங்கலம் மற்றும் வேலூர் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்பள்ளிப்பட்டு கொங்க ராம்பட்டு ரயில்வே கேட் வழியாக திருப்பி விடப்பட்டன.


பட்டாசு வெடித்ததில் தகராறு: 5 பேர் மீது வழக்குபதிவு

கள்ளக்குறிச்சி,அக்.28- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதா கிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்தவர் கள் சமாதானம் செய்து வைத்துள்ள னர். இதனையடுத்து மீண்டும் தகறாறு நடந்துள்ளது. இதனைய டுத்து,பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி

கடலூர், அக்.28-  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரியலூர் மாவட்டம் இருங்காலங்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் 5 பேருடன் இருசக்கர வாகனத்தில் நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். பின்னர் கடலூர் செல்லும் சாலையில், திட்டக்குடி அடுத்த கொடிகளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மீது மோதியதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  இதில் படுகாயமடைந்த மற்றொரு பெண் உட்பட 2 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி, அக்.28- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலிவரத்தைச் சேர்ந்தவர் திமப்பா.  கூலி வேலை செய்யும் இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் மனநலம் பாதித்த 27 வயது பெண்ணை பாலியல்  வன்இகொடுமை செய்ததார். இதனால் அந்தப் பெண் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.  இது குறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் திம்மப்பாவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி சுதா அளித்த தீர்ப்பில், “ திம்மப்பாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.