districts

தீக்கதிர் விரைவு செய்திகள்

காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக போராட்டம்: பி.கே.சேகர்பாபு

சென்னை, அக்.5- சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தில் அவரது பிறந்த நாளான  செவ்வாயன்று  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அமைச்சர் பேசும்போது, சென்னை ஏழு  கிணறு பகுதியில் 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார், இந்த இல்லத்தில் 33 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். வள்ளளார் வாழ்ந்த இல்லத்தில் மரியாதை செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சமத்துவம், பசி என்பது நாட்டில் இல்லா மல் இருக்கவேண்டும் என்ற வள்ளலாரின் அரும்பணிகளை பெருமை படுத்தும் விதமாக  72 ஏக்கர் நிலப்பரப்பில் வடலூரில் வள்ள லார் சர்வதேச மையம் அமைப்பதற்கான  வரைபடங்கள் கோரி விளம்பரப்படுத்தி யுள்ளோம். விரைவில் டெண்டர் கோரப்பட்டு  வள்ளலார் சர்வதே மையம் வெகு விரை வில் கட்டப்படும். மேலும், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்க அரசு உதவி செய்யும் என்றார். கோவில் திறப்பு எப்போது? அன்னை தமிழில் வழிபாடு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போராடு வதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால்  தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்பு ணர்ச்சி காரணமாக பாஜ போராட்டம் நடத்து கின்றது. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படியே  கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு கள் விதிக்கப்படுகின்றது. வார இறுதி நாட்களி லும் திருக்கோவில்களை திறக்கக்கோரி பா.ஜ.க போராட்டம் நடத்துவது தேவை யற்றது. இந்த நிலை ஆண்டு முழுவதும் தொட ராது என்றும் கொரோனாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்த வுடன் கோவில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அரசு ஊழியர் சங்க தங்கசாலை பகுதி மாநாடு

சென்னை,அக்.4- தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கத்தின் தங்கசாலை 13ஆவது பகுதி மாநாடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. தங்கசாலை ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி சூழலை மேம்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்கவேண்டும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதில் தலைவர் சி.லக்ஷ்மணன்,தலைமையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜே.பட்டாபி,முன்னாள் ஆவடி அம்பத்தூர் பகுதி இணைசெயலாளர் பரமசிவம், மாவட்டத் தலைவர் பா.சுந்தராம்பாள், மாவட்டச் செயலாளர் ம.அந்தோணி சாமி, ஆகியோர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தங்கசாலை பகுதித்தலைவராக க.மோகன் தாஸ், செயலாளராக மு.விவேகானந்தன், பொருளாளராக தாமோதரன், மகளிர் துணை குழு அமைப்பாளராக சி.சித்ரா ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

உதவி ஆய்வாளர்  சுட்டு தற்கொலை

செங்கல்பட்டு, அக். 05- செங்கல்பட்டு அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவடடம், திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கௌதமன் (வயது 58). சிறப்பு பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, லதா என்ற மனைவி மற்றும் சாய்முகிலன் (27), சாய்சித்தார்த் (16) ஆகிய மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஒருவர் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்ததால், அவருடைய பாதுகாப்பு பணியில் கௌதமன் திங்களன்று ஈடுபட்டிந்தார். பின்னர், பணி நேரம் முடித்து குடியிருப்பு வந்ததாகவும். வீட்டில் அனைவரிடமும் மன உளைச்சலுடன் பேசியதாக கூறப்படுகிறது.  அப்பொழுது  அறையில் தனியாக இருந்த கௌதமன் பாதுகாப்பு பணிக்காக தான் வைத்திருந்த 9 எம்எம் கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தாழம்பூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் துப்பாக்கியை கைப்பற்றி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளருக்கு பணிச்சுமை, கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும். இதனால், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற முயன்றதாகவும் தெரிகிறது. இதற்கு குடும்பத்தினர் மறுத்ததால் மன உளைச்சலுடன் காணப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

காலமானார்

சென்னை, அக். 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு -  சைதாப்பேட்டை பகுதிக்குழு உறுப்பினர் மறைந்த மு.பச்சையப்பனின் மனைவி பி.முனியம்மாள் செவ்வாயன்று (அக்.5) காலமானார். அவருக்கு வயது82. அன்னாரது உடல் அஞ்சலிக்காக எண்.82/38, அம்மையப்பன் தெரு, ராயப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் இரவீந்திரபாரதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி புதனன்று (அக்.6) காலை 9 மணி அளவல் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் நடைபெறுகிறது.

ரூ.36.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

சென்னை, அக். 5- சென்னையில் திங்களன்று  நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 34 பயனாளி களுக்கு ரூ.36 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வழங்கினார். தமிழகம் முழுவதும் மக்களின் குறை களைத் தீர்க்கும் வகையில் அந்தந்த மாவட்ட  கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் நடைபெற்று வந்தது. சென்னையில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த மக்கள் குறை நாள் கூட்டம் மீண்டும்  தொடங்கப்பட்டது.. சென்னை மாவட்ட ஆட்சி யர் ஜெ.விஜயாராணி தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 234 மனுக்கள் பெறப்பட்டன.