கடலூர்,ஜூலை 12- பொதுவுடைமை கவிஞர், மே தின பாடல்களை எழுதியவர், திரைப்பட பாடல் ஆசிரியர், கடலூர் மாவட்டத்திலுள்ள ஆடுரில் பிறந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. அவரது நூற்றாண்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூலை 27 அன்று கடலூரில் மிக சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் பங்கேற்கின்றனர். என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. மாதவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.