districts

நூதன முறையில் செல்போன் திருட்டு  

சென்னை, மார்ச் 24 சென்னை, ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த வர் கார்த்திக். அசோக் நகரில் உள்ள காலணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கே.கே.நகர் ஆர்.கே. சண்முகம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தனது செல்போன் சார்ஜ் இல்லாததால் 'சுவிட்ச் ஆப்' ஆகிவிட்டது அவசர மாக வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய கார்த்திக் அவரிடம் தனது செல்போனை கொடுத்தார். உடனே அந்த மர்ம வாலி பர் செல்போனுடன் அங்கி ருந்து தப்பி சென்று விட்டார்.