districts

விஷச்சாராயம் விற்றவருக்கு வழங்கிய நிவாரணத் தொகை ரத்து

சென்னை, மே 17-

   செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதி யில் விஷச்சாராயம் குடித்ததில் 8 பேர் வரை பலியாகி விட்டனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   இதில் விஷச் சாராயத்தை விற்பனை செய்த கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை, விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜய குமார் பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஒதி யூரை சேர்ந்த வேலு, சந்துரு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர். இதில் அமாவாசை என்பவரும் அந்த விஷச் சாராயத்தை குடித்திருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது. இதனால் அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

   இதனால் விஷச் சாராயம் குடித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பட்டியலில் அமாவாசை பெயரையும் அதிகாரிகள் சேர்த்துவிட்டனர். கள்ளச் சாராயம் விற்றவருக்கும் ரூ.50 ஆயி ரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக பலர் குற்றம் சாட்டியதையடுத்து அமாவாசைக்கு வழங்கப் பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை செங்கல்பட்டு ஆட்சியர் ரத்து செய்துள்ளார்.