districts

img

கல்வராயன் மலையில் பிஎஸ்என்எல் 4ஜி அலைபேசி கோபுரங்கள் அமைப்பு

கள்ளக்குறிச்சி, மே 4- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம், ஆலனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் 4ஜி அலைபேசி கோபுரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்.கல்வராயன் மலையில் வாழும்  பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வராயன் மலையில் வாழும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தொலை தொடர்பு இணைப்பு வேண்டும் என்பதாகும். அதன்டிப்படையில் கல்வராயன் மலையில் பிஎஸ்என்எல் 4ஜி அலைபேசி கோபுரங்கள் 29 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தினால் நிறுவப்பட்டுள்ளது. மீதமுள்ள கோபுரங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். மலைவாழ் மக்களுக்கு உரிமைச்சான்று   எனது பணி காலத்திலேயே கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சான்று மற்றும் அலைபேசி இணைப்பு வழங்கிட வேண்டு என ஏற்கனவே உறுதியளித்திருந்தேன். அதன்படி ஏற்கனவே வன உரிமைச் சான்று இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது அலைபேசி இணைப்புக்கான அலைபேசி கோபுரங்கள் அமைத்து பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு ள்ளது. இந்த இணையதள  இணைப்பினை இளைஞர்கள் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். இந்த அலைபேசி இணைப்பு அதிவேக நெட்வொர்க் இணைப்பாகும். இணையதள இணைப்பு உள்ள அனைத்து அலைபேசியிலும் இந்த நெட்வொர்க் பயன்படும். உலக செய்திகளை மறைவாழ் மக்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும். என்பதற்காக அலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அலைபேசியை நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார் ஆட்சியர். இந்நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் தமிழ்மணி,சென்னை பிஎஸ்என்எல் மொபைல் சேவை பொது மேலாளர் ஜெயக்குமார்  ஜெயவேலு, கடலூர் பொது மேலாளர் (நிர்வாகம்) பாலச்சந்திரன், மற்றும் துணை பொது மேலாளர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.