என்எஸ்சி போஸ் சாலையோர கடைகளை அகற்றிய போது ஏற்பட்ட அதிர்ச்சியில் கிருஷ்ணவேணி என்கிற வியாபாரி உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு காரணமான 59வது வார்டு மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிருஷ்ணவேணி குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும், சாலையோர கடைகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 17) எஸ்என்சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் இரா.அருள்குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.