districts

img

இந்தியஜனநாயகவாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

மாதவரம் தோழர் ம.மீ.ஜெயிலான் நினைவு 7ஆம் ஆண்டு ரத்ததான முகாம்  ”எங்க வாப்பா வீடு” குடும்பத்தார் மற்றும் இந்தியஜனநாயகவாலிபர்சங்கம் இணைந்து ஞாயிறன்று (மார்ச் 6) மாதவரம் அலெக்ஸ்நகரில் நடைபெற்றது. முகாமை 25ஆவது வட்டகவுன்சிலர் எஸ்.நந்தகோபால் துவக்கிவைத்தார். வாலிபர்சங்க வடசென்னை  மாவட்டச்செயலாளர் எல்.பி.சரவணதமிழன், பா.தேவி, ம.மீ.மைதீன்பீ, பிரமிளா (மாதர்சங்கம்), சி.திருவேட்டை (சிஐடியு), மாரிமுத்து (அலெக்ஸ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்) ஊடகவியலாளர்கள் ஜோதிராமலிங்கம் (டிஎன்பிபிஏ) வா.கி.பிரகாஷ், கிரிதரன், அரசு ஸ்டான்லி மருத்துவமனை ரத்தவங்கி பொறுப்பாளர் டாக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.