districts

மதுரவாயல்- துறைமுகம் இடையே ரூ.6 ஆயிரம் கோடியில் 2 அடுக்கு மேம்பாலம்

சென்னை, மார்ச் 17- சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே ஒன்றிய, மாநில அரசுகளுடன் இணைந்து ரூ.6 ஆயிரம் கோடியில் 2 அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த சாலை சுமார் 20 கி.மீட்டர் தூரம்  அமைகிறது. கோயம்பேட்டில் இருந்து துறைமுகம் வரை 2 அடுக்கு மேம்பாலமாக இருக்கும். மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை ஓரடுக்கு மேம்பாலம் மட்டுமே அமைக்கப்படும். 13 இடங்களில் சாலையில் இருந்து இறங்கும் பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. நேப்பியர் பாலம் முதல் சுமார் 9 கி.மீட்டர் தூரம் கூவம் ஆற்றின் பகுதிகளில் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு இரண்டு அடுக்கு மேம்பாலமாக கட்டப்படு கிறது. இதேபோல் ஐ.என்.எஸ். அடையார் பகுதி யில் உள்ள கடற்படை குடியிருப்புகளும் இந்த பகுதிக்குள் வருகின்றன. அவற்றை அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்ட சாலையில் பொதுமக்களின் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக நிர்வாகம், கடற்படை ஆகியவை இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து  அதிகபட்சமாக 30 மாதங்களில் உயர்மட்ட சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்.  இத்திட்டத் திற்காக கூவம் ஆற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்கள் அகற்றப்படும். தற்போது ஆங்காங்கே ஒரு தூண் மட்டுமே அமைக்கப்படும். சேலம்- சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.